Showing posts with label நாட்டுப்புறவியல். Show all posts
Showing posts with label நாட்டுப்புறவியல். Show all posts

தாலாட்டு பாடல்

ஆராரோ ஆராரிராரோ
ஆரோ ஆராரிராரோ

கண்ணே நீ உறங்கு
ஆரிரோ ஆராரோ

காணே மயில் உறங்கு
ஆரிரோ ஆராரோ

பசும் பொண்ணே……… நீ உறங்கு
பூவரசு வந்து உறங்கு

யாரடிச்சு நீ அழுத
அடிச்சார சொல்லி அழு

மாமன் அடிச்சானோ
மல்லிக்கை பூ செண்டாலே

அத்தை அடிச்சாலோ
அரளி பூ செண்டாலே

அடிச்சாரை சொல்லி அழு
ஆக்கினைகள் செஞ்சு வைப்போம்

யாரும் அடிக்கவில்லை
ஐவிரலும் சீண்டவில்லை

தானே அழுகுறாண்டி
தனக்கு ஒரு துணை வேண்டுமுனு

ஆராரோ ஆராரிராரோ
ஆரோ ஆராரிராரோ