எழுத்தாளர் சுஜாதா அவர்கள் 27-02-2008 அன்று இரவு மரணம் அடைந்தார்

எனக்கு தமிழ் எழுத்தின் மீது சிறு வயதிலேயே ஆர்வம் கொள்ள வைத்தவர்.
இவரின் எழுத்தில் இழைந்தோடும் நகைச்சுவை விவரிக்க முடியாதது....
இவரால் அறிமுகப்படுத்தப்பட்ட கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் ஏராளம்.
ஒரு நவீன அறிவியல் எழுத்தாளரை இழந்தது தமிழுக்கு பேரிழப்பு.



சுஜாதாவின் கல்லறையில் இவ்வாறு எழுதப்படலாம்...............

இங்குதான் கிடக்கிறான்
சுஜாதா ரெங்கராஜன்
எழுத்தின் சகல இரகசியங்களும்

நுட்பங்களும் எல்லாம்
இவனுடன் சேர்த்து

இங்கு புதைக்கப் பட்டிருக்கின்றன
பெரும் பாரமான

மண் குவியல்களின் அடியில் கிடக்கிறான்
கடவுளை விட

தான் பெரிய எழுத்தாளனா என்று வியந்தபடி