மரவட்டை

வண்டியை
எடுத்துகொண்டு
வெளியே வந்தபோது
சிகப்பு ரயில் பெட்டிகள்
நகர்வது போல்
மரவட்டை ஒன்று
தன் உலகத்தில்
சுழன்று கொண்டிருந்ததது
எதிர்காலம் தெரியாமல்
நிகழ்காலம் புரியாமல்
அதன் உடலைப்
பதம் பார்க்கும்
வண்டியின் சக்கரங்களை
இழுத்துக்கொண்டேன்
கனவு காணும் உரிமை
அதற்கும் உண்டு.


- அழகியசிங்கர்-