சிதைவுகள்

பானை உடைந்து
சுடுபருக்கைகளாய் சிதறுகின்றன.

யோசனைக்கு உவப்பாயும்
காயங்களுக்கு களிம்புமாயுமில்லை.

வியர்த்தமாய் காத்திருந்த விளைநிலங்களை
விழுங்குகின்றன தரிசுகள்.

முகம் மறைத்து வெக்கை கொட்டுகின்றன
தோட்டத்து சூரியகாந்திகளும்.

உண்டதும் உமிழ்ந்ததும்
அவிழ்ந்ததும், அவிழாததுமானவைகளுக்கு
அடையாளம் தேவையற்றதாகிறது
குப்பைக்குவியலில்.

-சூர்யா
www.manoharggs.blogspot.com