வீடெனப்படுவது யாதெனில் பிரியம் சமைக்கிற கூடு

கிளிநொச்சி அகிலனின் வலைதளத்தை நண்பர் செந்தில்நாதன் எனக்கு பரிந்துரைத்திருந்தார். என் சிறு வயதில் மின்சாரம் இல்லாத இரவுகளில் எங்கள் வீட்டின் ஓட்டு விரிசல்களின் வழியாக தெரியும் நிலவின் அழகை தூக்கம் வரும் வரை பார்த்துக்கொண்டே இருப்பேன். இன்று மாநகரத்தில் நிலவை பார்ப்பதே அரிதாக இருக்கிறது. இது தொடர்பான அகிலனின் கவிதையில் ஒன்று........ (அவர் இது கவிதையா என்று சந்தேகம் எழுப்பியிருந்தார். சந்தேகம் இல்லை அகிலன், கவிதைக்கான பத்து விதிகளையும் இது பூர்த்தி செய்கிறது.)

கூரையின்
முகத்தில் அறையும்
மழையைப் பற்றிய
எந்தக் கவலைகளும் அற்றது
புது வீடு
இலைகளை உதிர்த்தும்
காற்றைப் பற்றியும்
இரவில் எங்கோ காடுகளில்
அலறும் துர்ப்பறவையின்
பாடலைப் பற்றியும்
எந்தக்கவலைகளும்
கிடையாது
புது வீட்டில்..
ஆனாலும் என்ன
புது வீட்டின்
பெரிய ஜன்னல்களூடே நுழையும்
நிலவிடம் துளியும் அழகில்லை..

மேலும் தொடர .... http://www.agiilan.com/?p=329