மனப்பறவை

நித்தம் நித்தம்
அம்புகள் பாய்ந்த வலியில்
துடிக்கிறது

ரத்தம் கசிய கசிய
சன்னல் கம்பிகளின்
இரும்புப் பிடிகளுக்கு
நடுவில்
கதவுகள் திறக்க
காத்திருக்கிறது
போதும் போதும்
பறந்தது போதுமென்று
தடவிக் கொடுக்கிறது
காற்று.

சிறைகளை உடைத்து
வெளியில் வந்துவிடு
இரவோடு இரவாக
அழைக்கிறது
நிலவு.

ஆகாயமே சிறையாகிப் போனதால்
சிறகுகளை எரித்த
நெருப்பின் வெளிச்சத்தில்
கூண்டுக்குள் இடம்தேடும்
மனப்பறவை.

- புதிய மாதவி
-நன்றி : செ.நா.